செவ்வாய், 24 ஜூன், 2014

இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்…

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?
இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும்.
இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.
இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்

மூல நோயை கட்டுப்படுத்தம் உணவு பழக்கவழக்கங்கள்


         மூல நோய் பாதித்தவர்கள் உயிர் போகும் வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவை சிகிச்சை தீர்வு என்றாலும் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலமும் தீர்வு காணலாம்.

கண்டுகொள்ளாமல் விடப்படும் மூலம் புற்றுநோயாக மாறலாம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


மருத்துவர்கள் கூறுகையில், ஆசனவாய் பகுதியில் ரத்தக்குழாய் தடிமன் ஆவதுதான் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் ரத்தம் வெளியேறும். அதன்பின்பு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.

மூலம் உண்டாவதற்கு முக்கிய காரணமே மலச்சிக்கல் தான். பரம்பரையாகவும் இந்நோய் வரலாம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள், தொந்தி உள்ளவர்களுக்கு வயிறு அழுத்தம் அதிகரித்து மூலப் பிரச்னையை உருவாக்குகிறது. பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இது வரும். ஆரம்பக்கட்டத்திலேயே உடலில் ஜீரணம் மற்றும் வெளியேற்றம் ஆகிய சுழற்சியில் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்னை பெரிதாகி விடும்.

முதலில் உணவில் கவனம் செலுத்துவது அவசியம். மலச்சிக்கலைப் போக்கும் உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கென பிரத்யேக யோகா பயிற்சிகளும் உள்ளன. சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். இல்லையென்றால் மீண்டும் வளர்ந்து மிரட்டும்.

நார்ச்சத்து உள்ள உணவு வகைகள் மற்றும் பழங்கள், கீரைகள் சாப்பிடுவதன் மூலம் இதை தவிர்க்கலாம். மேலும் மூலப்பிரச்னை உள்ளவர்கள் அசைவம் மற்றும் மசாலா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். தொப்பை உள்ளவர்களும், குண்டானவர்களும் உடல் எடையை குறைக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியை வழக்கப்படுத்தி கொள்வது நல்லது. குறைந்தளவு தண்ணீர் குடிப்பதாலும் இந்த பிரச்னை ஏற்படுகிறது. கேரட் ஜூஸ் தினமும் குடிப்பது நல்ல பலனைத் தரும். காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாறு குடித்தால் ஓரளவு தீர்வு காணலாம். அகலமான பாத்திரத்தில் சுடு தண்ணீர் நிரப்பி அதில் உட்காரும் போது வலி குறையும்.

கருணைக் கிழங்கை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். எலுமிச்சை அளவு புளியை கெட்டியாக கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு உரித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து உப்பு போடவும். வேக வைத்த கருணைக்கிழங்கை உதிர்த்து கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். கெட்டியானதும் இறக்கவும். மூலத்தால் உண்டாகும் புண்களை கருணைக் கிழங்கு குணப்படுத்தும்.

கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெந்தயக் கீரையை சுத்தம் செய்து நெய்யில் வதக்கவும். பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய காய்கறிகளுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, ரொட்டித்தூள், வதக்கிய வெந்தயக் கீரை, பச்சைப் பட்டாணி ஆகியவற்றை உலர்வாக பிசைந்து கொள்ளவும். இதை வடை போல தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் வார்த்து வேக வைத்து சாப்பிடலாம். இதில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது.

பூண்டு 100 கிராம் அளவுக்கு எடுத்து உரித்து பொடியாக நறுக்கவும். இதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை தனியாக உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். இத்துடன் வதக்கிய பூண்டு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பாசுமதி அரிசி சாதத்தையும் சேர்த்துக் கிளறவும். பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.

உணவுதான் மூலத்துக்கு தீர்வு. தினமும் இரண்டு வேளை உணவில் கீரை சேர்க்க வேண்டும். முளை கட்டிய பயறு வகைகள், மாதுளை, சப்போட்டா ஆகிய பழங்களை சாப்பிடலாம். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் பூண்டை உரித்து பொடியாக நறுக்கி பாலில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். தினமும் பூண்டு பால் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் இரண்டு முறை கருணைக் கிழங்கை உணவில் சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், தேங்காய், கருவாடு மசாலா உணவுகள் தவிர்க்கவும்.

சில்லி சிக்கன், சில்லி மீன் என்று எண்ணெயில் பொரித்த, பொரிக்காத அசைவ வகைகள், முட்டை வேண்டாம். சுத்த சைவமாக மாறிவிடுவது நல்லது. கீரைகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் தினமும் உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம். அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும். அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவினால் எரிச்சல் குணமாகும்.

அம்மான் பச்சரிசிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்கட்டு உடையும். அரைக்கீரையுடன் பாசிப்பயிறு, மிளகு, நெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். ஆகாயத் தாமரை இலையை அரைத்து கட்டினால் வெளிமூலம், மூலக்கட்டி போன்றவை குணமாகும்.

ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும். ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்கட்டு தீரும். அரை லிட்டர் ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய் 50 கிராம் சேர்த்து காய்ச்சி வைத்து கொள்ளவும். இதனை தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் குணமடையும்.

மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் விளக்கெண்ணெய்யை தினமும் ஆசன வாயில் தடவினால் தீர்வு காணலாம். ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். ஆவாரம் பூவை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.

இஞ்சி சாற்றில் கடுக்காய் பொடியை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் விடுதலை பெறலாம். இஞ்சியை துவையல் அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் தீரும். இலந்தை இலையை அரைத்து புளித்த மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து குடித்தால் மூலக்கடுப்பு குணமாகும்.

திங்கள், 23 ஜூன், 2014

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் பாதிப்புகள்

பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து
தான் இதை உறுதி செய்வார்கள். 

ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும். திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், 'வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும். 

மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. 

இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும். 

மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக்கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். 

உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும். 

மெனோபாஸின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைத் தடுக்க... 

ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக விட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கிச் சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாறுடன் சம பங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன், அருந்த வேண்டும். 

மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும். 

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும்.

சிசேரியன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இயல்பான பிரசவத்தில் கர்ப்பப்பை வாய் திறந்து குழந்தை வெளியே வருகிறது. அதில் சிக்கல் இருந்தால் சிசேரியன் (caesarean) கைகொடுக்கும்.
கர்ப்பிணியின் அடிவயிற்றைக் கீறி, கர்ப்பப்பையை கிழித்து, உள்ளேயிருக்கும் குழந்தையை வெளியே எடுப்பதுதான் சிசேரியன் முறை. 

தாய், சேய் இருவரின் உயிரையும் காப்பாற்றுவதே இம்முறையின் அடிப்படை நோக்கம். தாயாகிற பெண்ணின் கூபக எலும்புக்கட்டு (Pelvic Structure) குறுகி இருந்தால் குழந்தை வரும் பாதையும் குறுகிவிடும். அதனால் இயல்பான வழியில் குழந்தை வெளிவருவது சாத்தியம் இல்லாது போகும். 

அந்நிலையில் சிசேரியன்தான் தீர்வாக அமையும். குழந்தையின் தலை பெரிதாகவும், தாயின் கூபக எலும்பு குறுகியும் இருந்தால் அப்போதும் சிசேரியன் சிபாரிசு செய்யப்படும். கர்ப்பப்பையின் அடிப்பாகத்தில் நஞ்சு இருந்தால் இயற்கைப் பிரசவத்தின்போது உதிரப்போக்கு அளவை மீறி – தாய், சேய் இருவரின் உயிருக்குமே ஆபத்தை உண்டாக்கலாம். 

அதனால் பிரச்சினைக்குத் தீர்வாக சிசேரியனைத்தான் நாடவேண்டி இருக்கும். பொதுவாக, பிரசவத்தின் போது குழந்தையின் தலைதான் முதலில் வெளியே வரும். சில அசாதாரண நிலைகளில் குழந்தையின் கால் முதலில் வெளிவரத் துவங்கும். 

அப்போதும் பிரசவத்தை நல்லவிதமாக செய்து வைக்கவே மருத்துவர்கள் முயல்வார்கள். குழந்தையின் எடை அதிகமாக இருந்தாலோ, உடல் கனமாக இருந்தாலோ, குழந்தைப் பிறப்புப் பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ சுகப்பிரசவம் சாத்தியப்படாது. 

சிசேரியன் அவசியமாகிவிடும். பிரசவத்தின்போது குழந்தைக்கு எந்தவிதத்திலாவது மூச்சுத் திணறல் ஏற்படுமானால் உடனடியாக குழந்தையை வெளியே எடுக்க சிசேரியன்தான் வழியாக அமையும். சுகப்பிரசவம் சிக்கலாகிவிட அநேக காரணங்கள் உண்டு. 

கர்ப்பப்பையில் குழந்தை குறுக்காக இருத்தல், சாய்ந்து இருத்தல், நச்சுக்கொடி முதலில் வருதல், கை முதலில் வருதல் போன்றவை மட்டுமே சிறந்த வாய்ப்பாகும். சிலருக்கு வயிற்றிலேயே குழந்தைகள் இறந்து பிறந்திருக்கும். 

அத்தகையவர்களுக்கு முன்னதாகவே நாள் குறித்து சிசேரியன் செய்கிறார்கள். தாய்க்கு இரத்த அழுத்தம் அதிகமாயி, உடம்பு முழுவதும் வீங்கி இருந்தால் பிரசவத்தில் தாய்க்கு வலிப்பும், மயக்கமும் வரக்கூடும். அதனால் தாய், சேய் இருவர் உயிருக்கும் ஆபத்து நேரலாம். 

இதனைத் தடுக்க சிசேரியன் உதவும். கர்ப்பப்பை வாயில் புற்று நோய், அல்லது கர்ப்பப்பை அருகில் கட்டி இருந்தால் சிசேரியன்தான் உகந்தது. நீரிழிவு, இருதயநோய் உள்ள கர்ப்பிணிகளுக்கு சிசேரியனையே மருத்துவர்கள் சிபாரிசு செய்வார்கள். 

ஒருமுறை சிசேரியன் செய்துகொண்ட பெண் அடுத்த முறை சிசேரியன் மூலம்தான் குழந்தை பெறவேண்டும் என்பதில்லை. ஆனால் நீடித்த நோய் உபாதை உள்ளவர்களுக்கு இரண்டாவது முறையும் சிசேரியன் செய்யும்படி இருக்கும். இப்போதெல்லாம் மருத்துவர்கள் யாருக்கு சிசேரியன் தேவை என்பதை முன்கூட்டியே ஸ்கேன் மூலம் கண்டறிந்து சொல்லிவிடுகிறார்கள். 

* சிசேரியன் செய்து கொண்ட தாய் குறைந்தது ஒன்றரை மாதம் ஓய்வில் இருக்க வேண்டும். அதன் பிறகு வீட்டிலும், அலுவலகத்திலும் வழக்கமாக செய்கிற வேலைகளை தொடரலாம். 

* சிசேரியனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கருவுறாமல் இருப்பது நல்லது. 

* ஒரு தாய்க்கு மூன்று முறைக்கு மேல் சிசேரியன் செய்வதில்லை.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள

பெண்கள் 3 நாள் (மாதவிடாய்) பிரச்சனையின் போது, பெண்கள் கடுமையான தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள்.
ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் என்றழைக்கப்படும் தொகுப்பு ஹார்மோன்களுடன் இருக்கும் கருப்பையின் சுவர்கள் கிழிவதால் மாதவிடாய் தசைப்பிடிப்பு வலிகள் வருகின்றன. 

ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ்களும், வலியும் இணை பிரியாமல் ஒரே சமயத்தில் வருகின்றன. மேலும், பிரசவத்தின் போது வலியை வரவழைக்கும் பணியை செய்யும் முதன்மையான காரணியாகவும் ப்ரோஸ்டாக்ளான்டின்ஸ் உள்ளன. 

இது மட்டுமல்லாமல் இரத்தம் இல்லாததாலும், தசைகள் உரசுவதாலும் கூட கருப்பையில் வலி உண்டாகும். இவ்வாறு மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் வலியைக் குறைக்க உதவும் சில வழிமுறைகளைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.. 

• கால்சியம் நிறைந்திருக்கும் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உணவுடன் சேர்த்துக் கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் போராடவும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங்கள் பால் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் கால்சியம் மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம். 

• மாதவிடாய்க்கு முன்னதாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை சேர்த்துக் கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் என்ற என்ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் போராடும். மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென்மையாகவும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்றி விடும். 

• உடலில் வரும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நிவாரணியாக இருக்கும் கற்றாழை, மாதவிடாய் பிரச்சனைக்கும் மருந்து என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற்றில், ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் வலியில்லாத இரத்தப் போக்கை உருவாக்க முடியும். 

• மாதவிடாயின் போது காஃபிக் அமிலம் நிரம்பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், வலியிலிருந்து பெருமளவு நிவாரணம் பெற முடியும். ஓமத்தை மாசாலாக்கள் மற்றும் மூலிகை தேநீரில் கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதமான நிவாரணத்தைப் பெற்றிட முடியும். 

• மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவிடாய் சுழற்சியை வரைமுறைப்படுத்தவும் இஞ்சி உதவும். இஞ்சியை தேநீராக காய்ச்சி குடிப்பதன் மூலம் ஆச்சரியம் தரும் பலன்களை அடைய முடியும்.

பெண்களை வதைக்கும் மாதவிடாய் பாதிப்புகள்

அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம்
தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை இருக்காது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. 

• அன்னாசிப்பழத்துடன் திராட்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும். 

• ஒரு டம்ளர் அன்னாசிப்பழச் சாறுடன், கால் டம்ளர் அருகம்புல் சாறு கலந்து குடித் தால் மாதவிடாய்க் கோளாறுகள் முற்றிலும் நீங்கும். 

• தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது. 

•  பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும். 

• பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும். 

• நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும். 

• புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது! 

• மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும். 

• கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம். 

• புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். 

• வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்! 

• பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்! 

• உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.